சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 19-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரிஸ் டில்லர்சனைச் சந்தித்துரையாடினார்.
தற்போது, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி முக்கிய வாய்ப்பை எதிர்நோக்குகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் சீரான தொடர்பை நிலைநிறுத்தி வருகின்றேன் என்று ஷிச்சின்பீங் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாட்டு அரசுத்தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்கள் மற்றும் எழுச்சிக்கு இணங்க, சீனா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் நிலை உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கிடையேயான பரிமாற்றத்தை அதிகரிப்பதோடு, இரு தரப்பு, பிரதேசம், உலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும் என்றும், உரிய முறையில் உணர்வலை தன்மையுடைய பிரச்சினைகளைக் கையாண்டு, இரு நாட்டு உறவு புதிய துவக்கப் புள்ளியிலிருந்து சீராகவும் நிதானமாகவும் வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பீங் விருப்பம் தெரிவித்தார்.