• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் மன்னர் கசார் எனும் காவியத்தின் கதைப் பாடல் கலைஞர்களின் பதிவேடு
  2017-03-20 16:11:48  cri எழுத்தின் அளவு:  A A A   

மூன்று ஆண்டுக்காலத் திட்டம் மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அலி பகுதியைத் தவிர, திபெத் முழுவதிலும், மன்னர் கசார் எனும் காவியத்தின் கதைப்பாடலைப் பாடி வரும் கலைஞர்கள் 94 பேர் பற்றிய பதிவேடு பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு செப்டம்பர் மன்னர் கசார் எனும் காவியம், ஐ.நா யுனேஸ்கோ அமைப்பின் மனித குலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ படைப்புகளின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. உலகளவில் தொல்லுயிர் எச்சம் என அழைக்கப்படும் காவியங்களில் இதுவும் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீரஞ்செறிந்த மன்னர் கசார் போராடிய வரலாற்றை இக்காவியம் பதிவு செய்து, பண்டைக்காலத்தில் திபெத் இனச் சமூகத்தின் வாழ்க்கை விபரங்களை பன்முகங்களிலும் வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040