• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறிசேனா-சாங் வான்சுவேன் சந்திப்பு
  2017-03-21 18:23:03  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா திங்கள்கிழமை கொழும்புவில் சீன அரசவை உறுப்பினரும் பாதுகாப்பமைச்சருமான சாங் வான்சுவேனைச் சந்தித்துப் பேசினார்.பொருளாதராம், வேளாண்மை, அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, பாதுகாப்பு முதலிய துறைகளில் சீனா இலங்கைக்கு மாபெரும் ஆதரவையும் உதவியையும் வழங்கியுள்ளது. இதற்காக உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்று சிறிசேனா சந்திப்பின் போது கூறினார்.
21ஆவது நூற்றாண்டு கடற்வழி பட்டுப்பாதை எனும் திட்டப்பணியுடன் தொடர்புடைய நாடுகளில் இலங்கை முக்கிய நாடாகும். இலங்கையுடன் சேர்ந்து கூட்டாக வளர்ச்சி பெற்று இரு நாட்டு மக்களுக்கு நன்மை தர வேண்டும் என்று சாங் வான்சுவேன் கூறினார்.
இச்சந்திப்புக்குப் பிறகு இலங்கை பாதுகாப்பமைச்சர் ருவான் விஜெவெர்ப்பானாவுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040