21ஆம் நாள் முதல், பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதால், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 8 நாடுகளின் 10 விமான நிலையங்களிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகள், செல்லிடப்பேசியை விட மேலும் பெரிய மின்னணு உபகரணங்களை கைகளில் கொண்டு செல்லக் கூடாது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அன்று அறிவித்தது.
ஜோர்டான், துருக்கி, சௌதி அரேபியா, குவெய்த், எகிப்து, கத்தார், அரபு எமிரேஸ்ட், மொரோக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 விமான நிலையங்களைத் தேர்ந்தெடுதற்கான காரணம், இந்த அறிக்கையில் விளக்கிக் கூறப்படவில்லை. தடை செயல்படுத்தப்படும் காலம், எதிர்காலத்தில் பிற விமான நிலையங்கள் சேர்க்கப்படுவது முதலியவை பற்றியும் குறிப்பிடப்படவில்லை.(ஜெயா)