குய்சோ மாநிலத்தின் தலைவர் சுன்சிகாங் 22ஆம் நாள் குய்யாங் நகரில், சீனாவுக்கான இந்திய தூதர் விஜய் கோகலேயைச் சந்தித்தார். ஆழமான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை இரு தரப்பும் மேற்கொள்ள விரும்பியுள்ளன.
விஜய் கோகலே பேசுகையில், குய்சோ, இந்தியாவின் பல்வேறு தரப்புகளுடன் பரிமாற்றம் மேற்கொள்ளும் பாலமாக்கி, இரு தரப்பின் பரிமாற்றத்தை முழு மூச்சுடன் ஆதரிக்க விருப்பம் தெரிவித்தார். குய்சோவின் பெருந்தரவுகள், மருத்துவச் சிகிச்சை முதலிய தொழிற்துறைகளின் வளர்ச்சி வாய்ப்புகளில் இந்தியா நம்பிக்கை கொள்கிறது. இரு தரப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.(ஜெயா)