சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 23ஆம் நாள் முற்பகல் கான்பெராவில் ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் மால்கம் டர்ன்புல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன-ஆஸ்திரேலியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45 ஆண்டுகளில், பல்வேறு துறைகளிலும் இரு நாட்டு ஒத்துழைப்பு முன்னேறி வருகின்றது. ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, எதார்த்த ஒத்துழைப்பை முன்னேற்றி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக லீ கெச்சியாங் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய-சீன உறவு மற்றும் ஒத்துழைப்பு ஆழமாகி வருகின்றது. உயர் நிலை அதிகாரிகளிடையேயான பரிமாற்றம் அதிகம். சீனாவுடனான நம்பிக்கையை ஆழமாக்கி, ஆஸ்திரேலிய-சீன ஒத்துழைப்பின் நிதானத்தன்மையை நிலைநிறுத்த ஆஸ்திரேலியா விரும்புவதாக மால்கம் டர்ன்புல் தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து, தாராள வர்த்தகத்தையும், சந்தைக் திறப்பையும் பேணிக்காத்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க ஆஸ்திரேலியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.