சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 26ஆம் நாள் மாலை வெல்லிங்டன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்து, நியூசிலாந்தில் அதிகாரப்பூர்வப் பயணத்தைத் தொடங்கினார். நியூசிலாந்து தலைமை அமைச்சர் மற்றும் அவரது மனைவி லீகெச்சியாங் தம்பதியை வரவேற்றனர்.
லீகெச்சியாங் பேசுகையில், சீன-நியூசிலாந்து தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இப்பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இப்பயணத்தின் மூலம் இருநாட்டுறவு பற்றியும், பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஒத்துழைப்பு நிலையை உயர்த்தி, அரசு சாரா நட்புறவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
நியூசிலாந்து பயணத்தின் போது, இருநாட்டுத் தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பல நிகழ்வுகளில் இணைந்து பங்கெடுக்க உள்ளனர். (வான்மதி)