திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசும் சீன அறிவியல் கழகமும் அண்மையில் உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. இவ்வுடன்படிக்கையின் படி இரு தரப்பும் இணைந்து அறிவியல் சோதனையைத் துவங்கவுள்ளன. சிங்காய்-திபெத் பீடபூமி அறிவியல் சோதனை தொடங்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு பின், சிங்காய்-திபெத் பீடபூமி பெருமளவு பன்நோக்க அறிவியல் சோதனையை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.