ஈரான், சிரியா, வடகொரியா ஆகியவற்றுடன் தொடர்புடைய பெருமளவு ஆட்கொல்லி ஆயுதங்களின் பரவல் தடுப்பு பற்றிய சட்டமியற்றலை அத்துமீறுவதைக் காரணமாக, அமெரிக்க அரசு, மார்ச் திங்கள் 25ஆம் நாள், ரஷியாவின் 8 ராணுவத் தொழில் நிறுவனங்களின் மீது தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த முடிவு, ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனால், ரஷியாவை இது கடுமையாகப் பாதிக்க போவதில்லை என்று ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரிய சாக்ஹரோவா 26ஆம் நாள் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேலை நாடுகள், கிரிமா பிரச்சினையால் ரஷியாவின் மீது பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.