• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-நியூசிலாந்து தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
  2017-03-27 17:00:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 27ஆம் நாள் முற்பகல் நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் அந்நாட்டுத் தலைமை அமைச்சர் பில் இங்கலிஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லீகெச்சியாங் பேசுகையில், சீன-நியூசிலாந்து தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45 ஆண்டுகளில், உயர் நிலை அரசியல் நம்பிக்கை உருவாக்கப்பட்டு, செழிப்பான ஒத்துழைப்புக் கனிகளும் பெறப்பட்டுள்ளன. வேறுபட்ட நாடுகள் இணக்கமுடன் பழகுவதற்கு இருநாட்டுறவு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார்.

இருநாடுகளும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்றும், ஆசிய அடிப்படை வசதி வங்கியின் கட்டுக்கோப்புக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரதேச பன்முக பொருளாதாரக் கூட்டுறவு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பில் பேசுகையில், ஒரே சீனா என்ற கொள்கையை நியூசிலாந்து பின்பற்றி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் ஒத்துழைப்பை ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பின், பல துறைகளிலான ஒத்துழைப்பு ஆவணங்கள் அவர்களின் முன் கையெழுத்தாயின. (வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040