அரபு நாடுகள் கூட்டமைப்பின் 28ஆவது உச்சி மாநாட்டுக்கான ஆயத்த கூட்டங்களில் ஒன்றான அரபு நாடுகள் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 27ஆம் நாள் ஜோர்டானின் சொவைமா நகரில் நடைபெற்றது. பாலஸ்தீன பிரச்சினை முழு அரபு நாடுகளின் முக்கிய பிரச்சினையாகும். பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதியை நிறைவேற்ற இரு நாடுகள் திட்டத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் ஒரு மனதாக வலியுறுத்தினர்.
இரு நாடுகள் திட்டத்துக்கு ஆதரவு அளித்து, அரபு அமைதி முன்மொழிவில் ஊன்றி நின்று, ஜெருசலேத்தை இஸ்ரேல் கைப்பற்றுவதை கண்டிக்க வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு அவையின் உறுப்பு நாடுகளில் இஸ்ரேல் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(மோகன்)