நாணயக் கொள்கையை சுருக்கிக் கொள்வதில் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பதைத் தவிர புதிய வழிமுறைகளை மேற்கொள்ளக் கூடும் என்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் உயர் அலுவலர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின்படி செயல்பட்டால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி இருப்புநிலைக் குறிப்பின் அளவை குறைக்கும் என்று நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் விலிம் சி டாதலி அண்மையில் செய்தியாளரிடம் கூறினார்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி உலகில் மிக அதிக அமெரிக்க அரசுக் கடன் தொகையைக் கொண்ட வங்கியாகும். அதன் இருப்புநிலைக் குறிப்பின் அளவு 4 இலட்சத்து 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கையிருப்புத் தொகையை அமெரிக்கா குறைத்தால், சந்தையில் விநியோகிக்கப்படும் அமெரிக்க அரசுத் கடன் தொகை அதிகரிக்கும். இதன் விளைவாக வங்கி வட்டி விகிதமும் உயர்த்தப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.(வாணி)