சிரியாவின் இட்லெப் மாநிலத்தில் வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து, ஐ.நா அறிக்கையை வெளியிட்டது. ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் வெளியிட்ட இந்த அறிக்கையில், இந்த செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.(ஜெயா)