இலங்கையில் அதிகாரப்பூர்வ நட்புப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் யூ செங் ஷெங் 7ஆம் நாள் கொழும்பு மாநகரில் இலங்கை நாடாளுமன்ற தலைவர் கருஜெயசூர்யாவுடன் சந்திப்பு நடத்தினார்.
சீன-இலங்கை நட்புறவு பண்டைக்காலம் தொட்டு நிலவி வந்திருக்கின்றது. 2014ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் இலங்கையில் பயணம் மேற்கொண்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதோடு, இரு நாட்டுறவு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது என்று யூ ஷெங் சாங் கூறினார்.
இலங்கை நாடாளுமன்றத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி விருப்பம் தெரிவித்துள்ளது. இரு நாட்டுறவை ஆழமாக்கி, இரு தரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில், புதிய ஆற்றலை இது அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.(மோகன்)