சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் ஏப்ரல் 12-ஆம் தேதி பெய்ஜிங்கில் சௌ தொமே மற்றும் பிரின்சி குடியரசின் தலைமையமைச்சர் பேட்ரைஸ் துரோவோதாவைச் சந்தித்துரையாடினார்.
செள தொமே மற்றும் பிரின்சி குடியரசு, சீனாவுடனான தூதர் நிலைத் தூதாண்மை உறவை மீண்டும் உருவாக்கிய பிறகு, இரு நாட்டுறவுக்கான புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், இரு தரப்பு நட்பு ஒத்துழைப்பு முன்னேறுவது உறுதி என்று துரோவோதா தெரிவித்துள்ளார். மேலும், சீனாவை நண்பராகவும் கூட்டாளியாகவும் கருதும் செள தொமே மற்றும் பிரின்சி, ஆப்பிரிக்காவுக்கான சீனாவின் கொள்கையை அதிகமாக பாராட்டுவதாக தெரிவித்தார்.