• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்திலுள்ள ஜீலோங் நுழைவாயிலுக்கான சோதனை நிறைவு
  2017-04-18 09:24:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ஜீலோங் நுழைவாயிலை, சர்வதேச நெடுஞ்சாலை நுழைவாயிலாக மாற்றும் தேசிய நிலை சோதனையை சீனா நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த சர்வதேச நெடுஞ்சாலை நுழைவாயில் திறந்து வைக்கப்படவுள்ளது.

2015-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜீலோங் நுழைவாயில் மீண்டும் இயங்கிய தொடங்கிய பிறகு, சீனாவையும் தெற்காசிய பிரதேசத்தையும் இணைத்து, வெளிநாட்டுக்கான திபெத்தின் வர்த்தகத்தை முன்னேற்றும் முக்கிய வழியாக இந்நுழைவாயில் மாறியுள்ளது.

2017-ஆம் ஆண்டு முதல் இரு திங்களில், ஜீலோங் நுழைவாயில் வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்த சரக்குகளின் அளவு 17கோடியே 56இலட்சத்து 80ஆயிரம் டன்னை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 57.6விழுக்காடு அதிகமாகும்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040