சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ஜீலோங் நுழைவாயிலை, சர்வதேச நெடுஞ்சாலை நுழைவாயிலாக மாற்றும் தேசிய நிலை சோதனையை சீனா நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த சர்வதேச நெடுஞ்சாலை நுழைவாயில் திறந்து வைக்கப்படவுள்ளது.
2015-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜீலோங் நுழைவாயில் மீண்டும் இயங்கிய தொடங்கிய பிறகு, சீனாவையும் தெற்காசிய பிரதேசத்தையும் இணைத்து, வெளிநாட்டுக்கான திபெத்தின் வர்த்தகத்தை முன்னேற்றும் முக்கிய வழியாக இந்நுழைவாயில் மாறியுள்ளது.
2017-ஆம் ஆண்டு முதல் இரு திங்களில், ஜீலோங் நுழைவாயில் வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்த சரக்குகளின் அளவு 17கோடியே 56இலட்சத்து 80ஆயிரம் டன்னை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 57.6விழுக்காடு அதிகமாகும்.(தேன்மொழி)