பட்டுப்பாதை சீன-நேபாளம் சுற்றுலா பரிமாற்ற கூட்டம் 19ஆம் நாள் நேபாளம் தலைநகரான காத்மாண்டில் நடைபெற்றது.
காத்மாண்டிலுள்ள சீனச் சுற்றுலா அலுவலகமும் நேபாளம்-சீன தொழிற்துறை மற்றும் வணிகச் சங்கமும் இக்கூட்டத்தைக் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. நேபாளத்தின் பண்பாட்டு சுற்றுலா பயணி விமான சேவைத்துறை அமைச்சர் தில்நாத் கிரி, நேபாளத்திற்கான சீன தூதர் யுஹொங் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அழகான சீனா—2017ஆம் ஆண்டு பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு என்ற நடவடிக்கையை சீனத் தேசிய சுற்றுலாப் பணியகம் செயல்படுத்திய பின்னணியில், மேலதிக சீன-நேபாளம் மக்கள் எதிர் தரப்பு நாடுகளுக்கு சென்று, சுற்றுலா மேற்கொள்வது, இரு நாட்டு சுற்றுலா துறை வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவை இக்கூட்டத்தின் நோக்கமாகும் என்று காத்மாண்டிலுள்ள சீன சுற்றுலா அலுவலகத்தின் தலைவர் யாங் செங் கூறினார்.(மோகன்)