சீனா-ஐரோப்பிய ஒன்றியத்தின் 7ஆவது உயர்நிலை நெடுநோக்குப் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன அரசவையின் உறுப்பினர் யாங்சியேச்சி, வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான ஃபெட்ரிகா மோகிரினி ஆகியோர் இப்பேச்சுவார்த்தைக்குத் கூட்டாக தலைமை தாங்கினர்.
சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு தரப்புகளின் கூட்டு நன்மைகளுக்குத் துணை புரிய வேண்டியது. சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார உறவு வளர்ச்சிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று யாங்சியேச்சி தெரிவித்தார்.
இரு தரப்புகளும் நெடுநோக்குத் திட்டத்திலும் திறப்பு ஒத்துழைப்பிலும் ஊன்றி நின்று, சீன-ஐரோப்பிய ஒன்றிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவின் சீரான நிதானமான வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.