சீன அரசவையின் வழமை கூட்டம் தலைமை அமைச்சர் லீகெச்சியாங்கின் தலைமையில் 19ஆம் தேதி நடைபெற்றது. வரி குறைப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகமாக மேற்கொள்ளப்படும் என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வணிகச் சூழலை மேம்படுத்துவதன் மூலம், தொழில் நிறுவனங்களின் ஆற்றல் மற்றும் புத்தாக்கத்தை வலுப்படுத்த வேண்டும். அத்துடன், பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி, கட்டமைப்பின் தர உயர்வை முன்னேற்ற வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதல் காலாண்டில் 20 ஆயிரம் கோடி யுவான் மதிப்பிலான செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் அடிப்படையில், மதிப்புக் கூட்டு வரியின் கட்டமைப்பை எளிதாக்குவது, வருமான வரி சலுகையைப் பெறக் கூடிய சிறு தொழில் நிறுவனங்களின் அளவை விரிவாக்குவது, தொடக்க நிலையிலுள்ள அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனி முதலீட்டாளருக்கு முன்னுரிமை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.(வான்மதி)