சீனாவின் சரக்கு விண்கலமான தியன்சௌ-1 20-ஆம் நாள் இரவு வென்செங் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தியென்செள-1 சரக்கு விண்கலம், சுற்றுவட்டப் பாதையில் உள்ள தியன்கொங்-2 விண்வெளி ஆய்வகத்துடன் இணைந்து, அதற்குத் தேவையான பொருள்களை அளித்து விண்வெளி அறிவியல் ஆய்வினை மேற்கொள்ளும்.
தியென்கொங்-1 சரக்கு விண்கலம் தனது கடமையை நிறைவேற்றினால், சுற்றுவட்டப் பாதையில் உள்ள விண்கலத்துக்கு பொருட்கள் மற்றும் எரிப்பொருட்களை வழங்கும் திறனைப் பெற்ற நாடாக சீனா திகழும். எதிர்காலத்தில், மனிதரை ஏற்றிச்செல்லும் சீன விண்வெளிக் கலத்தின் நீண்டகாலப் பயணத்தை நனவாக்குவதற்கு, இந்த திறன் முக்கியமான ஒன்று ஆகும்.(தேன்மொழி)