சர்வதேச நாணய நிதியத்தின் எஸ்.டி.ஆர்(சிறப்பு எடுப்பு உரிமை)எனும் கையிருப்புகளின் பயன்பாட்டு அளவை விரிவாக்குவதற்கு பங்காற்ற சீன மத்திய வங்கி விரும்புவதாக, சீன மத்திய வங்கியின் துணை ஆளுநர் யீ காங் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு சர்வதேச நாணய வங்கி மற்றும் உலக வங்கியின் வசந்தக்கால மாநாட்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 21ஆம் நாள் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய அமைப்புமுறையின் தற்போதைய உள்கட்டமைப்பை சீர்திருத்தம் செய்து, மேலும் மேம்பட்ட மற்றும் பயனுள்ள முறையில் நெருக்கடியை சமாளிப்பது என்பதில் பன்னாட்டுச் சமூகம் தீர்வு காண வேண்டும். இதில், எஸ்.டி.ஆர் பங்காற்ற முடியும் என்றும் யீ காங் குறிப்பிட்டார்.