• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்து சீன-கசகஸ்தான் ஒத்துழைப்பு
  2017-04-22 19:46:04  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, கசகஸ்தான் வெளியுறவு அமைச்சர் கைராட் அப்தக்மானோவ் ஆகியோர் ஏப்ரல் 21ஆம் நாள் ஆஸ்தானவில் செய்தியாளர் கூட்டத்தில் கூட்டாகப் பங்கெடுத்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணியில் இரு நாடுகளும் உருவாக்கிய "4 முதல்"என்ற கருத்துக்களைத் தெரிவித்தனர்.

2013ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கசகஸ்தானில் பயணம் மேற்கொண்ட போது, பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தைக் கூட்டாக உருவாக்கும் கருத்தை முதல்முறையாக முன்வைத்தார். சீனாவை அடுத்து, கசகஸ்தான், இம்மண்டலத்திலுள்ள முதல் நாடாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் சீனா ஒத்துழைப்பு மேற்கொண்ட முதலாவது நாடாக கசகஸ்தான் உள்ளது. மேலும், வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் பற்றி சீனாவுடன் பரிமாற்றத்தை நடத்துவதிலும், கசகஸ்தானே முதலாவது நாடாகும். இந்நிலையில், சீன-கசகஸ்தான் ஒத்துழைப்பு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை உருவாக்கும் முன்மாதிரியாக வளங்குவது உறுதி என்று வாங்யீ தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040