இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுக்கு எதிரான நக்ஸல் தீவிரவாதிகள் 24ஆம் நாள் உள்ளூர் காவல்துறையினரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினர். அதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமுற்றனர் என்று இந்திய காவல்துறை தகவல் வெளியிட்டது.
எஞ்சிய நக்ஸல் தீவிரவாதிகளைத் வேட்டையாடும் வகையில் காவல்துறையினர்கள் தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதல் நிகழ்ந்த பிறகு, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தமது சுட்டுரையில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்தார்.(வான்மதி)