சிரியா அரசின் வேதி ஆயுத ஆராய்ச்சி திட்டத்துடன் தொடர்புடைய 271 சிரியா அரசுப் பணியாளர்கள் மீது தடையாணை மேற்கொள்வதாக அமெரிக்க நிதி அமைச்சகம் 24-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பணியாளர்கள் சிரியா அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சிரியா அரசுக்கு வேதியில் ஆயுதங்களின் ஆராய்ச்சி சேவையை இந்த மையம் வழங்கும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடையாணைப் பட்டியலில்இடம்பெற்றவர்களின் அமெரிக்க சொத்துகள் முடக்கிவைக்கப்படும். அதோடு, அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கும், அவர்களுக்கும் இடையேயான வர்த்தகமும் தடை செய்யப்படும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(தேன்மொழி)