வட கொரியா மீது எப்பொழுது இந்தப் புதிய தடை நடவடிக்கையை ஐ.நா பாதுகாப்பு அவை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து டொனல்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கவில்லை. இதனிடையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விவாதத்தில், கொரியாவின் அணு ஆயுத சோதனை மீதான தடை நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் அந்நாட்டின் அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கொள்காட்டி தெரிவித்துள்ளது. (பூங்கோதை)