• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்வது அமெரிக்காவின் நிலைப்பாடு
  2017-04-25 17:00:55  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா பாதுகாப்பு அவை, வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப், ஐ.நாவுக்கான பாதுகாப்பு அவை உறுப்பு நாடுகளின் நிரந்தரத் தூதருடன் ஏப்ரல் 24ஆம் நாள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

வட கொரியா மீது எப்பொழுது இந்தப் புதிய தடை நடவடிக்கையை ஐ.நா பாதுகாப்பு அவை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து டொனல்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கவில்லை. இதனிடையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விவாதத்தில், கொரியாவின் அணு ஆயுத சோதனை மீதான தடை நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் அந்நாட்டின் அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கொள்காட்டி தெரிவித்துள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040