• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-கனட நிதி நெடுநோக்குப் பேச்சுவார்த்தை
  2017-04-26 10:04:12  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங் யாங் 25ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் பயணம் மேற்கொண்ட கனட நிதி அமைச்சர் பில் மோர்னொ, சர்வதேச வர்த்தக அமைச்சர் மெலைன் சாம்பென் ஆகிய இருவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-கனட பொருளாதார மற்றும் நிதி நெடுநோக்குப் போச்சுவார்த்தையை அவர்கள் கூட்டாகத் தொடங்கினர்.
இரு தரப்புகளின் நட்புறவை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை விரிவாக்குவது, இரு நாடுகளின் மக்களுக்கு நலன் தரும். மேலும், இது, உலக மற்றும் பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் செழுமைக்கும் துணை புரியும். கனடாவுடன் சேர்ந்து, இப்பேச்சுவார்த்தையின் பயன்களை விரிவாக்கி, முக்கியப் பொருளாதார கருப்பொருட்கள் குறித்து ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விரும்புவதாக வாங் யாங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040