பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் சந்தை எதிர்காலம் தொடர்பான புதிய காலாண்டு அறிக்கையை உலக வங்கி 26ஆம் நாள் வெளியிட்டது. எரிபொருள், உலோகம் உள்ளிட்ட வணிகப் பொருட்களின் விலை இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் தொடர்ந்து உயரும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு மற்றும் இதர எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தி குறைப்பு உடன்படிக்கையை செயல்படுத்த வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலரை எட்டும் என்றும் இவ்வறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.(வான்மதி)