"தாட்" முறைமையைப் பரவல் செய்யும் இடமான வட கியோங்சாங் மாநிலத்தின் சியோங் சு குனில் உள்ள நூற்றுக்கும் மேலான குடிமக்கள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி, தாட் முறைமையை அகற்றி, அமைதியை மீட்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். "தாட் சட்டப்பூர்வமற்றது, பயனற்றது" "அமைதியைச் சீர்குலைக்கும் தாட் முறைமையை உடனடியாக அகற்றுங்கள்" என்று அவர்கள் முழக்கமிட்டனர்.(மீனா)