சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சி்க்காச்செ நகரில் அமைந்துள்ள நாதுலா வர்த்தக கணவாய் மே திங்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சீன-இந்திய எல்லையில் அமைந்துள்ள நாதுலா கணவாய், இரு நாடுகளுக்கிடையேயான ஒரேயொரு தரைவழி வர்த்தக பாதையாகும். குறிப்பிட்ட பருவகாலங்களின்படி, ஒவ்வோர் ஆண்டும் மே திங்கள் முதல் நவம்பர் திங்கள் வரை திறந்து வைக்கப்பட்டு, டிசம்பர் திங்கள் முதல் அடுத்த ஏப்ரல் திங்கள் வரையிலான காலத்தில் மூடிப்படும்.
தவிர, கடல் மட்டத்திலிருந்து 4318 மீட்டர் உயரமான நாதுலா கணவாய், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிக குறைவான தூரமுடைய தரைவழிப் பாதையாகும். உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான தரைவழி வர்த்தக பாதையாகவும் விளங்குகின்றது.(தேன்மொழி)