இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ சாவ்ஹுய்யும், உலக விவகாரத்துக்கான இந்தியக் கமிட்டியின் பொது இயக்குநரும், சீனாவுக்கான முன்னாள் தூதருமான நிளின் சூரியும், மே 3ஆம் நாள் சந்தித்துரையாடினார். சீன-இந்திய உறவு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியாவும், சீனாவும், புதிதாக வளரும் பெரிய நாடுகளாகவும், முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. இரு நாடுகளிடையிலான சிந்தனை கிடங்கு ஒத்துழைப்பை இக்கமிட்டி ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, இந்திய-சீன உறவின் வளர்ச்சிக்குப் பங்காற்ற விரும்புவதாக நிளின் சூரி தெரிவித்தார். (பூங்கோதை)