இவ்வாண்டின் துவக்கம் முதல், சோமாலியாவில் 32 ஆயிரம் பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 618 பேர் இந்நோயால் உயிரிழந்தனர் என்று ஐ.நா மனித நேய ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டது.
அந்நாட்டில் 18 மாநிலங்களில் 13இல் வாந்திபேதி நோய் பரவியுள்ளது. மழைக்காலம் வருவதால் இந்நிலைமை மேலும் அதிகரித்திட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.