தரைவழி தொடரமைப்பு, மின் இணைத்தொகுதி, இணையம் ஆகிய மூன்று வழிகளின் கட்டுமானம், திபெத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் சீச்சாலா அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார். மேலும், இக்கட்டுமானம் தொடர்பான திட்டப்பணிகளை சீனா நேபாளத்துடன் முன்னேற்றி வருகிறது. சில திட்டப்பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் திபெத் பங்கேற்று, தெற்காசியாவுக்கான பெரிய ஊடுவழியை உருவாக்கும் முயற்சி வெறும் கூற்று அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
திபெத்தை தெற்காசியாவுக்கு திறந்த முக்கிய ஊடுவழியாக கட்டியமைப்பது என்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் முக்கிய அம்சமாகும். இது, திபெத்தின் திறப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் ஆகும். இதற்கென, அண்டை நாடுகளுடன் பல்வேறு துறைகளிலும் பன்முக தொடர்புகளை திபெத் வளர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.(வான்மதி)