பாகிஸ்தான் செனெட் அவையின் துணைத் தலைவர் மோலனா அப்துல் கபுர் ஹைடிரியின் வாகன அணி, மே 12ஆம் நாள் வெடி குண்டு தாக்குதலுக்குள்ளானது. இதில் இதுவரை 25 பேர் உயிரிழந்தனர். அப்துல் கபுர் ஹைடிரி உள்ளிட்ட 35 பேர் காயமுற்றனர். அவர்களில் 10 பேர் கடுமையாக காயமுற்றனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.