சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தின் உயர்நிலை கூட்டம் 14ஆம் நாள் 6 இணைக் கூட்டங்களை நடத்தியது. கொள்கைகளின் பரிமாற்றம், வசதிகளின் இணைப்பை விரைவுப்படுத்துவது, வர்த்தகம் தங்குதடையின்றி நடைபெறுவதை முன்னேற்றுவது, நிதித் திரட்டலைத் தூண்டுவது, மக்களின் தொடர்பை அதிகரிப்பது ஆகியவை பற்றியும், சிந்தனைக் கிடங்குப் பரிமாற்றம் பற்றியும் சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 1500க்கும் மேலான பிரதிநிதிகள் ஆழமாக விவாதித்தனர். பல பொதுக் கருத்துக்களை எட்டிய பின் அவர்கள் சில உடன்படிக்கைகளிலும் கையொப்பமிட்டனர்.