ஜியாவ் லோங் எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் நீர் மூழ்கிக் கலம் மற்றும் 96 அறிவியலாளர்களுடன், அறிவியல் ஆய்வு மேற்கொள்ள சீனாவின் சியாங் யாங் ஹொங்-9 எனும் கப்பல் மே 16-ஆம் நாள் ஷென்செனினிலிருந்து புறப்பட்டு, வட மேற்கு பசிபிக் பெருங் கடலுக்குச் சென்றது.
திட்டப்படி, வட மேற்கு பசிபிக் பெருங் கடலிலுள்ள யாப் அகழி மற்றும் மரியானா அகழி ஆகிய இரு பிரதேசங்களில் சோதனைப் பயணத்தை ஆய்வாளர்கள் மேற்கொள்வர்.
மரியானா அகழி, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். இப்பகுதியில்மிக அதிகமாக 8527 மீட்டர் ஆழம் உள்ளது குறிப்பிடத்தக்கது.(தேன்மொழி)