இந்தியாவில் உள்ள சீனர்கள் சங்கம் நிறுவப்படும் விழா மே 19ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்றது. இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ ச்சாவ் ஹூய் உள்ளிட்ட தூதாண்மை அலுவலர்கள், இச்சங்கத்தின் முதலாவது இயக்குநர் குழுவின் பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள சீனத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சீன மாணவர்கள், சீனச் செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் உள்ள சீன உடன்பிறப்புகள், வாய்ப்பை இறுகப்பற்றி, சீனர்களின் சமூக லட்சியத்தை மேலும் வளர்த்து, இந்தியாவில் உள்ள சீனர்களின் தகுநிலையை உயர்த்த வேண்டும் என்று லோ ச்சாவ் ஹுய் இவ்விழாவில் தெரிவித்தார்.