• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரியத் தீபகற்ப பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
  2017-05-25 09:39:54  cri எழுத்தின் அளவு:  A A A   
கொரியத் தீபகற்ப பிரச்சினையைக் கையாளும் வகையில், தொடர்புடையை கொள்கையைப் பின்பற்றி, பொது நிலைமையைக் கருத்தில் கொண்டு, பயனுள்ள வகையில் வளைந்து கொடுக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 24ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தெரிவித்தார்.
கொரியத் தீபகற்ப நிலைமை பதற்ற காலக்கட்டத்தில் உள்ளது. அணு ஆயுதமின்மை மயமாக்கத்தில் சீனா எப்போதும் ஊன்றி நிற்கும். வட கொரியா அணு ஏவுகணை சோதனை நடத்துவதை சீனா எதிர்க்கிறது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஐ.நாவின் தொடர்புடைய தீர்மானத்தை சீனா நடைமுறைப்படுத்தும். ஐ.நாவின் தீர்மானத்தின்படி, பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்குவதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுக்க சீனா பாடுபடும் என்று வாங்யீ தெரிவித்தார்.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040