இலங்கை அரசுத் தலைவர் மைத்திரிபாலா சிறிசேனா 24ஆம் நாள் புதன்கிழமை ஆஸ்திரேலியாவில் பயணத்தை தொடங்கினார். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புறவை வலுப்படுத்தும் நோக்கில், மைத்திரிபாலா இப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தில், கல்வி, பாதுகாப்பு, அறிவியல், தொழில் நுட்பம் போன்ற மேலதிக துறைகளிலான ஒத்துழைப்பை துவக்கும் புதிய வழிமுறைகள் பற்றி இரு தரப்பும் முக்கியமாக விவாதிக்கும் என்று தெரிகிறது.