இரு நாட்கள் நீடித்த 7 நாடுகள் குழு உச்சி மாநாடு 26ஆம் நாள் இத்தாலியின் தார்மினா கிராமத்தில் துவங்கியது. இதில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாக்குறுதியளிக்கும் கூட்டறிக்கை ஒன்றை, 7 நாடுகள் குழு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் வெளியிட்டனர்.
இணையத்தள பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று 7 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதியளித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு, இவ்வுச்சி மாநாட்டின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)