சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவை 26ஆம் நாள் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பிறகு, தற்போதைய கொரியத் தீபகற்பத்தின் நிலைமை குறித்து, சீனாவின் கருத்துக்களை வாங் யீ எடுத்துக்கூறினார்.
கொரியத் தீபகற்ப நிலைமை குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானத்தைக் கடுமையாக செயல்படுத்தும் அடிப்படையில், பேச்சுவார்த்தை மற்றும் அமைதி வழிமுறையின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வாங் யீ கூறினார். கொரியத் தீபகற்பத்தின் நிலைமையைத் தணிவு செய்து, இப்பிரச்சினையை அமைதியாக தீர்க்கும் வகையில், சீனாவும் ரஷியாவும் ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்று வாங் யீ கூறினார்.