• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தாராள வர்த்தகத்தில் ஏழு நாடுகள் குழு ஒத்த கருத்து
  2017-05-28 14:06:47  cri எழுத்தின் அளவு:  A A A   

இரண்டு நாட்கள் நீடிக்கும் ஏழு நாடுகள் குழு உச்சிமாநாடு 27ஆம் நாள் இத்தாலி நாட்டின் தோர்மினாவில் நிறைவடைந்தது. மாநாட்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் தாராள வர்த்தக துறையில் ஏழு நாடுகள் ஒத்த கருத்தை எட்டின. ஆனால், காலநிலை மாற்றம் பற்றி ஒத்த கருத்து எட்டப்படவில்லை.

லிபியா, சிரியா மற்றும் ஈராக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் மோதலைத் தீர்க்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான பாரிஸ் உடன்படிக்கையை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென அமெரிக்காவைத் தவிர, மற்ற ஆறு நாடுகள் ஒப்புக்கொண்டன. தாராள வர்த்தகத்தில் திறந்த சந்தையை நிலைநிறுத்துவோம் என்று கூட்டறிக்கையில் மீண்டும் தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040