கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையின் செயல்பாடுதான், இந்த அச்சுறுத்தல் நிலை குறைப்புக்கான முக்கிய காரணம். முன்பு சாலைகளின் பாதுகாப்பு நிலைமையை வலுப்படுத்துவதில் காவற்துறையினருக்கு உதவியளிக்கும் வகையில் ஈடுபடுத்தப்பட்ட படைப்பிரிவுகள் அடுத்த வாரம் முதல் படிப்படியாக வெளியேற்றப்படும் என்று தெரசா மே கூறினார். இதனிடையே, பிரிட்டன் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(வான்மதி)