7 நாடுகள் குழு உச்சி மாநாடு சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்தி, கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினையில் தலையிட்டதற்கு சீனா கடும் மனநிறைவின்மையைத் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார். இந்த பிரச்சினையில், சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும் நிலையாகவும் உள்ளது. தொடர்புடைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனையின் மூலம், சர்ச்சைகளை உரிய முறையில் தீர்த்து, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை முன்னேற்றி, இப்பிரதேசத்தின் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காக்க சீனா எப்போதும் பாடுபட்டு வருகிறது என்றும் லூக்காங் தெரிவித்தார்.(ஜெயா)