இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுப் பேரழிவு குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இலங்கை அரசுத் தலைவர் சிரிசேனாவிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் இலங்கையும் நட்பு அண்டை நாடுகளாகும். இலங்கையின் மீட்புதவிப் பணிக்குச் சீன அரசு முழு மூச்சுடன் ஆதரவளிக்க விரும்புகிறது. இலங்கை அரசுக்குத் தேவையான உதவி மற்றும் ஆதரவைச் சீனா வழங்கும் என்றார்.