• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிகாரில் மழை மற்றும் மின்னலுக்கு 23 பேர் சாவு
  2017-05-29 15:53:15  cri எழுத்தின் அளவு:  A A A   
பிகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் மற்றும் மழை தொடர்பான இயற்கை சீற்றங்களால் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

இவர்களில், 18 பேர் மின்னல் தாக்கியதிலும், 5 பேர் சுவர் இடிந்து விழுந்ததிலும் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040