• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கனில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு
  2017-05-30 16:38:50  cri எழுத்தின் அளவு:  A A A   
பாதுகாப்பு, அமைதி மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டை ஆப்கானிஸ்தான் ஜூன் 6ஆம் தேதி அன்று நடத்த உள்ளது. ஆப்கனின் தலைநகர் காபூலில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 20 நாடுகள் கலந்து கொள்ளும் என்று பாகிஸ்தானுக்கான ஆப்கன் துணைத் தூதர் சர்தஷ்ட் ஷாம்ஸ் தெரிவித்தார்.

ஆப்கன் அரசுத் தலைவர் அஷ்ரப் கானியின் உத்தரவின்பேரில் காபூல் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்மூலம் ஒரு குடையின்கீழ் ஆப்கன் தொடர்பான பல்வேறு கூட்டங்கள் நடைபெறும் என்று சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது ஷாம்ஸ், தெரிவித்தார்.

இந்த சர்வதேச மாநாட்டின்போது, தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு முக்கியமான விவகாரமாக விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இம்மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ள உள்ளது. இதனைத் தவிர, அமெரிக்கா, இந்தியா,. சீனா, பிரிட்டன், ஜப்பான், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் உல்ளிட்ட நாடுகளுக்கும், ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஷாம்ஸ் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040