இலண்டனில் ஜுன் 3ஆம் நாள் இரவில் நிகழ்ந்த இரண்டு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகள் மூவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டன் காவல்துறை 4ஆம் நாள் அதிகாலை தெரிவித்தது.
காவல்துறையினர் ஒருவர் சம்பவத்தின் போது கடுமையாக காயமடைந்தனர் என்று இலண்டன் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியது. மேலும், காயமடைந்தவர்கள் 20 பேர் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பிரிட்டன் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், இத்தகவலை காவல்துறை உறுதி செய்யவில்லை.
3ஆம் நாள் இரவு, இலண்டனிலுள்ள இலண்டன் பாலம், இலண்டன் பாலத்தின் அருகிலுள்ள பராவ்க் சந்தை, இலண்டனின் தென்மேற்கிலுள்ள வாக்ஸ்ஹால் ஆகிய மூன்று இடங்களில் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்தன. தற்போது வரை, இவற்றில் இரண்டு சம்பவங்கள் பயங்கரவாத தாக்குதலாக இருப்பதை, பிரிட்டன் காவல்துறை உறுதிப்படுத்தியது. வாக்ஸ்ஹலில் நிகழ்ந்த கத்தியால் தாக்கிய சம்பவம், பிற இரண்டு சம்பவங்களுடன் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. (மதியழகன்)