சீனத் திபெத் பண்பாடு•காத்மாண்டு கருத்தரங்கு 6ஆம் நாள் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டில் துவங்கியது. சீனத் திபெத்தின் உண்மையான நிலை பற்றிய நேபாள மக்களின் புரிதலையும், இரு நாட்டு மக்களின் புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.
இக்கருத்தரங்கில் பங்கேற்கும் இரு நாட்டு அறிஞர்கள் திபெத் மருத்துவவியல், பௌத்த மதப் பண்பாடு, ஓவியம், இரு நாட்டு வர்த்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து 6 மற்றும் 7ஆம் நாள் சொற்பொழிவு ஆற்றவுள்ளனர்.