• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனில் மீண்டும் உருவாகும் தொங்கு நாடாளுமன்றம்
  2017-06-09 19:01:03  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனின் பொது தேர்தலில் 9ஆம் நாள் காலை முதல் கட்ட முடிவு வெளியிடப்பட்டது. முடிவுகள் வெளியான 635 வாக்கு தொகுதிகளில், தற்போதைய தலைமை அமைச்சர் தெரேசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, 309 இடங்களை வென்றுள்ளது. நாடாளுமன்றத்தின் கீழவையில் தொர்ந்து முதல் இடம் வகித்த போதிலும், ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மையான 326 இடங்கள் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டில் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முடிவு எடுக்கப்பட்ட பிறகு, பிரிட்டனில் எதிர்பாராத இந்நிலை மீண்டும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற ஆட்சி முறையில், ஒரு தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டவில்லை எனும் போது தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது என்று அழைக்கப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040