கொல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதரகம் மற்றும் உள்ளூர் சீனர் நிறுவனங்களின் கூட்டு ஏற்பாட்டில், 2வது அனைத்திந்திய டிராகன் படகு பண்பாட்டு விழா ஜுன் 11-ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்றது.
டிராகன் படகு போட்டி, குங் ஃபூ காட்சி, ஆடல் பாடல் முதலியவை இவ்விழாவில் கலந்துகொண்டவர்களின் வரவேற்பு மற்றும் பாராட்டைப் பெற்றுள்ளன. மேலும், சீனச் சுற்றுலா மற்றும் விசா தொடர்பான பிரச்சார நிகழ்ச்சியும் சோங் ஜி எனும் சீனப் பாரம்பரிய உணவுகளும் வரவேற்கப்பட்டன.
சீனத் துணை நிலைத் தூதர் மா ச்சான்வூ துவக்க விழாவில் உரைநிகழ்த்தியபோது, நடப்பு நடவடிக்கை மூலம், சீன மற்றும் இந்திய மக்களுக்கும் இடையேயான புரிந்துணர்வை அதிகரித்து, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.(தேன்மொழி)